Sunday, March 3, 2013

ஈழநாட்டுத் திருத்தலம் 2.திருக்கேதீச்சுரம்


                         ஈழநாட்டுத் திருத்தலம்
                             2.திருக்கேதீச்சுரம்
அருள்மிகு கௌரியம்மை உடனுறை திருக்கேதீசுவரர்


Thirukateshvaran Kovil


மரம்: வன்னி
குளம்: பாலாவி

பதிகங்கள்: விருதுகுன்ற -2 -107 திருஞானசம்பந்தர்
 நத்தார்படை -7 -80 சுந்தரர்

முகவரி: மாந்தை
மன்னார் மாவட்டம்
இலங்கை
தொபே. 0094 23 3230034

இஃது ஈழநாட்டுத் தலங்களுள் ஒன்று, மன்னார் தொடர் வண்டி நிலையத்துக்குக் கிழக்கே 7.5கி.மீ. தொலைவில் பாலாவி ஆற்றின் கரை மேல் உள்ளது. இலங்கையில் தலை மன்னாருக்கு அருகில் உள்ளது.

மாதோட்டம்.
இது ``மாவின் கனிதூங்கும் பொழின் மாதோட்ட நன்னகரில், பாவம் வினையறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல், தேவன் எனை யாள்வான் திருக்கேதீச்சரத்தானே`` என்னும் இக்கோயிலுக்குரிய, சுந்தரமூர்த்திநாயனாரின் தேவாரப் பகுதியால்அறியக்கிடக்கின்றது. சம்பந்தமூர்த்திநாயனாரும் இக் கோயில் பதிகத்தில் இதைக் கூறியுள்ளார்கள்.

இறைவர் திருப்பெயர்:- திருக்கேதீசுவரர். இறைவியாரது திருப்பெயர்:- கௌரியம்மை. தீர்த்தம்:- பாலாவி ஆறு
துவட்டா என்னும் முனிவர் தவஞ்செய்து பேறுபெற்றது. சம்பந்தர் பதிகம் ஒன்று. சுந்தரர் பதிகம் ஒன்று. ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன.

             
                                     திருச்சிற்றம்பலம்








ஈழ நாட்டு திருத்தலங்கள் 1.திருக்கோணமலை


ஈழ நாட்டு திருத்தலங்கள்
1.திருக்கோணமலை

இறைவர் திருப்பெயர்         : அ/மி திருக்கோணேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்              : அ/மி மாதுமையாள்
தல மரம்                 : கல்லால மரம்
தீர்த்தம்                           : கோணதீர்த்தம்
வழிபட்டோர்                       :
தேவாரப் பாடல்கள்          : சம்பந்தர் - நிரைகழ லரவஞ் சிலம்பொலி


spt_p_konamalai.jpg (700×300)
தல வரலாறு
·       இக்கோயிலின் வரலாறு 3287 ஆண்டுப் பழமை வாய்ந்ததாகும். இதற்கு திரிகூடம் என்றும் பெயருண்டு. தட்சிண கைலாயம் என்ற பெயரும் உண்டு.
·       சுவாமிக்கு விளக்கேற்றுவதற்குப் போதியளவு நெய்யும் திரியும் கிடைப்பதற்கு வழிவகுத்தவர்கள், தாமரைத் தண்டின் நூலெடுத்து திரிசெய்தார்கள்; அந்த ஊர் இன்றும் "திரிதாய்" என்று வழங்குகின்றது.
·       போர்த்துக்கீசியர் 1624 ஆம் ஆண்டில் இத்திருக்கோயிலை பாழ்செய்துள்ளனர்.  
·       சுதந்திரம் பெற்றபின் 1950ஆம் ஆண்டில், கோயில் இருந்த நிலத்தில் ஆலயம் அமைக்க முற்பட்டுக் காசியிலிருந்து சிவலிங்கப்பெருமானை எழுந்தருளச் செய்தார்கள்.
·       அக்காலத்தில் நகரசபையார் கிணறு தோண்ட முயன்றபோது மூன்றடி தோண்டிய வேளையில் சிவனருளோ என்று கண்டவர்கள் அதிசயிக்கும் வண்ணம் மாதுமையாள் சமேத கோணேசுவரப் பெருமானோடு, சந்திரசேகரர், பார்வதியார், பிள்ளையார், அஸ்திரதேவர் முதலாய தெய்வத்திருவுருவங்கள் வெளிப்பட்டன.
·       அவையாவும் அண்மைக் காலத்திலமைக்கப் பெற்ற திருக்கோயிலில் ஆங்காங்கே எழுந்தருளச் செய்யப்பெற்றுள்ளன.
முன்னொரு காலத்திலேயே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருக்கோணமலையிலே உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலுமாக மூன்று பெருங்கோயில்கள் இருந்தன என்பர்.
சிறப்புக்கள்
·       உலகப்புகழ் பெற்ற திருக்கோணமலை மாவட்டத்தில் அறுபதுக்கும் அதிகமான சைவக்கோயில்கள் உள்ளன.
·       இன்றைக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னரே திருக்கோணேஸ்வரம் தேவாரம் பெற்ற திருத்தலமாக ஒளிவீசியது.
·       ஐம்பொன்னாலான அழகு மிக்க மூர்த்தங்கள் இருக்கும் மண்டபம் - தேவ மண்டபம், கண்கொள்ளாக்காட்சி தருவதாகும்.
·       நாடொறும் ஆறுகால பூசை ஆகம விதிகளின்படி தவறாமல் நடைபெறுகின்றன.
·       திருக்கோணேசப் பெருமானின் விழாக்களில் வெளிவாரியாக நடைபெறுவது ஆடி அமாவாசை விழாவாகும். கடலில் தீர்த்தமாடுவதற்கு பெருமான் எழுந்தருளும்போது, நகரிலுள்ள ஆலயங்களின் மூர்த்திகளும் தீர்த்தமாட அங்கே எழுந்தருளுவார்கள்.
·       ஆடி மாதம் போலவே, மகாமகத் தீர்த்த விழா, பங்குனி மாதத்தில் பூங்காவன மற்றும் தெப்பத் திருவிழா, மார்கழியில் திருவெம்பாவை விழா ஆகியன சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
·       நவராத்திரி நாட்களில் ஸ்ரீ சக்ரபூஜை வெகுசிறப்பாக நடைபெறுகிறது.
நாடு : இலங்கை
மாநிலம் : திருக்கோணேஸ்வரம் கிழக்கு
திருக்கோணேஸ்வரத்திற்கு இரயில் மூலம் கொழும்பிலிருந்து போகலாம். பேருந்து வசதிகளும் உள்ளன. திருக்கோணமலை இரயில் நிலையத்திலிருந்து கோயிலுக்கு நடந்து போகலாம்.
கோவில் உயர்ந்த இடத்தில் கடலோரத்தில் அமந்துள்ளது
கிழக்கு கோபுரம் தாண்டியவுடன் பெரிய பாறை அதை அடுத்து 50 அடி ஆழத்தில் கடல் ஆர்ப்பரிக்கிறது..
தெற்கு வாயில் நுழையும் பொழுது நந்திக் கொடியும் மணி மண்டபமும் நம்மை வரவேற்கின்றன.
.    “தாயினும் நல்ல தலைவரென்று அடியார்
தம்மடி போற்றிசைப்பார்கள்
வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா
மாண்பினர் காண்பலவேடர்
நோயிலும் பிணியும் தொழிலர் பால்நீக்கி
நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த
கோணமா மலையமர்ந்தாரே”
                        சம்பந்தர்               
              திருச்சிற்றம்பலம்.

Friday, March 1, 2013

பாடல் பெற்ற சிவத்தலங்கள் துளுவநாட்டு திருத்தலம்(கர்நாடகா மாநிலம்) திருக்கோகர்ணம்


பாடல் பெற்ற சிவத்தலங்கள்
துளுவநாட்டு திருத்தலம்(கர்நாடகா மாநிலம்)
திருக்கோகர்ணம்








திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்திருற இத்தலம் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் கைலையிலிருந்து இராவணன் கொண்டுவந்தது என்பது தொன்நம்பிக்கை.

இத்தலம் மங்களூரிலிருந்து 247 கி.மீ,ஹுப்ளியிலிருந்து 161 கி.மீ பெங்களூரிலிருந்து 500 கி.மீ
கோவாவிலிருந்து 159 கி.மீ தொலைவிலும் உள்ளது.
மங்களூர்-கோவா செல்லும் கொங்கன் இரயில் பாதையில் கோகர்ன் ரோடு என்ற இரயில் நிலையம் உள்ளது. இதிலிருந்து ஆட்டோ,சிற்றுந்து,பேருந்து மூலம்ஊருக்கு செல்லலாம்.
தங்குவதற்கு விடுதிகள் உள்ளன. கோவில் அர்ச்சகர்கள் வீடுகளிலும் தங்க வசதிகள் உண்டு.
மூலவர்  :              மகாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர்
 அம்மன்/தாயார்   :              கோகர்ணேஸ்வரி, தாமிரகவுரி, பத்ரகர்ணி
 தீர்த்தம் :              கோடி தீர்த்தம்
              
              
பழைமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்      :              திருக்கோகர்ணம்
 ஊர்       :              திருக்கோகர்ணம்
 மாவட்டம்          :              உத்தர் கன்னடா
 மாநிலம்              :              கர்நாடகா

















மேற்குப் பார்த்த ஆலயம். கோயிலமைப்பு, தமிழ்நாட்டு அமைப்பினின்றும் வேறானது. தெற்கிலும், மேற்கிலும் வாயில்கள் உள்ளன.மேற்குவாயில் வழியாகக் கடற்கரைக்குச் செல்லலாம். கோயில் கடற்கரைக்கு அருகில் உள்ளது.
மூலஸ்தானம் சிறிய அளவுடையது. நடுவில் சதுரமேடை அதில் வட்டமான பீடம் - இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பொன்று உள்ளது. இதனைச் சுவர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடமென்பர். இதன் நடுவில் வெள்ளை நிறமான பள்ளம் உள்ளங்கையளவு உள்ளது. அப்பள்ளத்தின் நடுவில் கொட்டைப்பாக்கு அளவில் மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம் தென்படுகிறது.சிவலிங்கம் கீழே உள்ளது.அவரது சிரசை மட்டுமே விரலால் தொட்டுத் திருமேனியை உணரலாம். பசுவின் காதுபோலக் குழைந்து தோற்றமளிக்கும் அருட்காட்சி நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது.
இத்தலத்தில் அதிகளவில் பித்ருபூஜை செய்கிறார்கள். இதனால் முன்னோர்கள் நரகத்திலிருந்தாலும் சொர்க்கம் செல்வார்கள் என்பதும், பவுர்ணமியன்று இந்த ஆற்றில் நீராடி சிவனை வழிபாடு செய்தால் பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்ததற்கு ஈடான பாவம்) விலகும் என்பதும் நம்பிக்கை.

 இராவணன் தன் தவத்த்தால் ஈசனை மகிழ்வித்து பிராணலிங்கத்தை பெற்று இலங்கை திரும்பிக்கொண்டிருந்தான்.து மாலை வேளை போல் சற்றே இருள் கவிய, ராவணன் சந்தியாவந்தனம் செய்வதற்காக கையிலிருந்த லிங்கத்தை அருகில் நின்று கொண்டிருந்த கணபதியிடம் கொடுத்து விட்டு சென்றான். அவர் அதை கீழே வைத்துவிட்டார். உடனே அந்த லிங்கம் சப்த பாதாளங்களையும் தாண்டி கீழே சென்று ஊன்றி நிலைத்து விட்டது.


 பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண் பேரவன்காண் பிறப்பொன்று மில்லாதான் காண்
கறையோடு மணிமிடற்றுக் காபாலி காண் கட்டங்கன் காண்கையிற் கபாலம் ஏந்திப்
பறையோடு பல்கீதம் பாடினான் காண் ஆடினான் காண்பாணி யாக நின்று
மறையோடு மாகீதம் கேட்டான் றான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
                                                                                                                                      -                                         திருநாவுக்கரசர்


“……..கால்களாற்பயனென் கறைக் கண்டனுறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணஞ் சூழாக் கால்களாற் பயனென்….
                                                                                                                             -திருநாவுக்கரசர்
                            
                           
                                                      .                       திருச்சிற்றம்பலம்