Friday, February 22, 2013

கொங்கு நாட்டு த்திருத்தலங்கள் கருவூர்


கொங்கு நாட்டு த்திருத்தலங்கள்
கருவூர்













இத்தலம் பெரிய ஊர்.பேருந்து மற்றும் இரயில் இணைப்புக் கொண்டது.
கோவில் மத்யபேருந்து நிலையம் அருகில் ஊள்ளது.
இக்கோவிலுக்குஆநிலைஎன்று பெயர். காமதேனு வழிபட்டத் தலம்.
சிவனுக்கு பால் அபிசேகம் சிறப்பு.இந்த தலம் திருஞான சம்பந்தரால் பாடப்பெற்றது.
இறைவன்: /மி பசுபதீச்சுவரர் என்றும் ஆநிலையப்பர் என்றும் கூறுவர்.
இரு அம்பாள் சந்நதிகள் உள்ளன.
இறைவி:  1./மி  அலங்காரவல்லி, (கிழக்குப் பார்த்த சன்னதி)
                 2./மி சவுந்திரநாயகி(தெற்குப் பார்த்த சன்னதி)
(கருவூரை அடுத்த அப்பி ப்பாளையம் என்ற ஊரில் கிராம அதிகாரிமகள் இறைவரிடம்
பக்தி கொண்டு சிவபதம் அடைந்து அலங்காரவல்லி அம்பாளாக இறைவனை மணந்ததாக வரலாறு)
பெரிய கோவில்.7நிலை இராச கோபுரம். புகழ்ச்சோழர் நாயனார் ஆண்ட பதி.எறிபத்தர் நாயனார் பிறந்தருளிய தலம்.
திருவிசைப்பா பாடி அருளிய கருவூர்த்தேவர் பிறந்த தலம்.கோவிலில் அவருக்கு தனிக் கோவில் உள்ளது.அங்கு தியானம்செய்ய மண்டபம் உள்ளது.இங்கு இறைவன் இந்த சித்தருக்காகசாய்ந்து கொடுத்தாக செய்தி.
விநாயகர் பெயர் பசுபதி விநாயகர்
உமை முருகு இறைவன் (சோமஸ்கந்தர்) சந்நதியும் உண்டு.
நால்வர் அரங்கம்என்ற அரங்கம் உள்ளது.இங்கு சமய சொற்பொழிவுகள் நடைபெறும்.
தேவர் திங்களும் பாம்பும் சென்னியும்
மேவர் மும்மதில் எய்தவில்லியர்
காவலர் கருவூருள் ஆநிலை
மூவராகிய மொய்ம்பர் அல்லரே.”-சம்பந்தர்.

                                                                                திருச்சிற்றம்பலம்.


No comments:

Post a Comment