Friday, February 22, 2013

கொங்கு நாட்டுத் திருத்தலங்கள் வெஞ்சமாக்கூடல்.


கொங்கு நாட்டுத் திருத்தலங்கள்
வெஞ்சமாக்கூடல்.





இத்தலம் கருவூருக்கு தெற்கில் அரவக்குறிச்சி பாதையில் உள்ள ஆறுரோடு பிரிவில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது.
சுந்தரரால் பாடப்பெற்ற தலம். கோவில் அருகில் சிற்றாறு உள்ளது.பழைய கோவில் வெள்ளத்தால்
அடித்துச்செல்லப்பட்டதால் புதிய கோவில் நிறுவப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்கிறது.
கோவில் பள்ளத்தில் உள்ளது. 15 படிகள் இற்ங்கிச் செல்லவேண்டும்.
இறைவன்:/மி கல்யாண விகிர்தநாதேச்சுவரர்
இறைவி: /மி பண்ணேர் மொழியாள்( மதுர பாஷினி)
ஆறுமுகக்கடவுள் தனிச் சந்நிதி உண்டு. அருணகிரிநாதர் இம் முருகன் மேல் திருப்புகழ் பாடியுள்ளார்.
63 நாயன்மார் சிற்பங்கள் நேர்த்தியாக உள்ளன.
வெஞ்சன் என்ற அசுரன் வழிபட்ட தலம்.
சிவபெருமான் தன் பக்தை யான ஒரு கிழவியிடம் தன் பிள்ளைகளை ஈடு காட்டி பொன்பெற்று சுந்தரருக்குக் கொடுத்ததாக வரலாறு.
இன்றும் பிள்ளை தத்தெடுப்போர் இக்கோவிலில் இறைவரிடம் தவிட்டுக்கு வாங்குவது உண்டு.
எறிக்குங் கதிர்வேயுதிர் முத்தமொடேல மிலவங் கந்தக் கோலமிஞ்சி
  செறிக்கும் புனலுட் பெய்து கொண்டு மண்டித் திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
முறிக்குந்த்தழை மாமூடப் புன்னை ஞாழல் குருக்கத்தி கண்மேற் குயில் கூவலறா
வெறிக்குங் கலைமா வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியெனையும் வேண்டுதியே
                                                                                                                    -சுந்தரர்.
                                                    திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment