Friday, February 22, 2013

கொங்கு நாட்டுத் திருத்தலங்கள் திருபாண்டிக்கொடுமுடி


கொங்கு நாட்டுத் திருத்தலங்கள்
திருபாண்டிக்கொடுமுடி





இத்தலம் கொடுமுடி என்று அழைக்கப்படுகின்றது.ஈரோடிலிருந்து தென்கிழக்கே 39 கி.மீ.தொலைவில் உள்ளது.இவ்வூரில் இரயில் நிலையம் உள்ளது.
மேருவின் ஒரு சிகரம்கீழே விழுந்ததால் உண்டான தலம்.
பிரம்மா,விஷ்ணு,சிவன் மூவரும் அருளும் மும்மூர்த்தித் தலம்.
3 முகமுடைய பிரம்மா சந்நதி சிறப்பு.வன்னிமரத்தடியில் இருக்கிறர்.
திருமால் பெயர் வீரநாரயணர்.
இங்கு காவிரி ஆறு தென் வடலாக செல்கிறது.காசிக்கு இணையாக கூறப்படுகிறது.
மூவர் பாடல் பெற்றது.சுந்தரர் நமசிவாய திருப்பதிகம் பாடியுள்ளார்.
இறைவர்: /மி கொடுமுடிநாதர், (மகுடேச்சுவரர்)
இறைவி: /மி   பண்மொழிநாயகி,(மதுரபாஷினி)
தீர்த்தம்: காவிரி
தலமரம்:வன்னி
தென்முகக்கடவுளுக்கு கீழ் முயலகனும், சனகாதி முனிவர்கள் நான்கு பேருக்கு பதிலாக ஒருவர் மட்டுமே இருக்கிறார்.
மற்றுப் பற்றெனகின்றி நின் திருப் பாதமே மனம் பாவித்தேன்
 பெற்றலும் பிறந்தேனினிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன்
 கற்றவர் தொழுதேத்துஞ் சீர்க்கறையூரிற் பாண்டிக்கொடுமுடி
 நற்றவா உனை நான் மறக்கினுஞ் சொல்லுநா நமசிவாயவே
                                             -சுந்தரர்.  
     திருச்சிற்றம்பலம்.                                                                                                                                                                           

No comments:

Post a Comment